சென்னை, மார்ச் 20 - இளம் வழக்கறிஞர்க ளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டு களுக்கு உதவித்தொகை வழங்கப்படும், சிறை வாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறையினை மேம்ப டுத்துவதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். அந்தக்குழு பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். பேரவையில் வெள்ளி யன்று (மார்ச் 20) சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச் சாலைகள் துறை மானி யத்தின் மீது விவாதம் நடை பெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து மேற்கண்ட புதிய அறிவிப்புக்களை வெளி யிட்டார்.